
இலங்கை தமிழ் அரசு கட்சியின் மறைந்த பெருந்தலைவர் அமரர் இரா.சம்பந்தன் அவர்களின் முதலாவது நினைவேந்தல் நிகழ்வு திருகோணமலை குளக்கோட்டன் மண்டபத்தில் இன்று (06)இடம்பெற்றது.
இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட கிளை ஏற்பாடு செய்த குறித்த நிகழ்வில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தலைமை தாங்கினார்.
மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு நினைவு கூறப்பட்டதுடன் அவர் பற்றிய பேருரையும் இதன்போது நிகழ்த்தப்பட்டது. குறித்த நிகழ்வில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன், திருமலை மாநகர சபை முதல்வர் க.செல்வராஜா, கட்சியின் உள்ளூராட்சி மன்ற தவிசாளர்கள்,இலங்கை தமிழ் அரசு கட்சியின் முக்கியஸ்தர்கள், கட்சியின் வட்டார கிளை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்