
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும் படகுகளையும் மீட்டு கொடுக்க வலியுறுத்தி மீனவர்கள் உண்ணாவிரத போராட்டம், ஏராளமானோர் பங்கேற்பு
ராமேஸ்வரம், மண்டபம், பாம்பன் உள்ளிட்ட மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன் பிடிக்க செல்லும் மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததா ஒரு குற்றச்சாட்டை முன்வைத்து இலங்கை கடற்படை தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வருவதை கண்டித்தும், இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும் படகுகளையும விடுதலை செய்ய வலியுறுத்தியும், இலங்கை நீதிமன்றத்தால் அபதாரம் விதித்து ஆறு மாதம் முதல் இரண்டு வருடம் வரை சிறையில் உள்ள மீனவர்களையும் மீட்டுக் கொடுக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் அடுத்த தங்கச்சி மடத்தில் மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
இந்த போராட்டத்தில் பல்வேறு பகுதியிலிருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோசங்களும் எழுப்பி வருகின்றனர்