
மாரிகாலம் ஆரம்பித்துள்ள நிலையில் வடமாகாணத்தில் ஒரு வாரமாக பெய்து வரும் அடைமழை நேற்று (25) காலை முதல் மழை மேலும் அதிகரித்தது. இந்நிலையில் நேற்றையதினம் கா.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு ஆரம்பமான நிலையில் மாணவர்கள் பெரிதும் சிரமங்களை எதிர்கொண்டனர்.
இதனையடுத்து மாணவர்களின் பரீட்சை நிலையங்களுக்கு உரிய நேரத்தில் அழைத்து செல்லும் நடவடிக்கையை இராணுவ அதிகாரிகள் மற்றும் வடக்கு பகுதி பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.