
மக்களின் காணி சுவீகரிப்பு வர்த்தமானி மீளப்பெறப்படுவதை அரசு 28கு முன் உறுதி செய்ய வேண்டும்! தவறினால் நாட்டை மட்டுமல்ல உலகையே உலுக்குமளவு போராட்டம் அமையும். இப் போராட்டத்திற்கு பாதிக்கப்பட்ட மக்களுடன் அனைத்து அரசியற்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தில் நேற்று (16) நடாத்திய ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.