
நீர்கொழும்பு முன்னக்கரை குளம் பகுதியில் படகு ஒன்று விபத்துக்குள்ளானதில் இருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.
இந்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 7 பேர் நீரில் மூழ்கியுள்ளனர், அவர்களில் 5 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
50 வயதுடைய தந்தையும் 20 வயதுடைய மகளும் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.